மகளிர் அணி நிர்வாகியோடு திருமணத்தை மீறிய உறவு சர்ச்சை.. தவெக மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு… புஸ்ஸி ஆனந்த் அதிரடி..!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரான செந்தில்நாதன், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவரது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  செந்தில்நாதன், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து சர்ச்சையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் தலைவராக இருந்த செந்தில்நாதன், கடந்த ஆண்டு தவெக கட்சி தொடங்கப்பட்ட போது நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ட்சியின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நீக்கம் அமைந்துள்ளது