திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் பெற்றோர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் தனுஸ்ரீ (5), மோசிகீரன் (6), அனன்யா (6) மற்றும் யோக வர்ஷினி (11) ஆகிய ஒரு சிறுவன் உட்பட 4 குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கண்முன்னேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே பலியான இக்கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆறாத் துயரத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
