இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். கலந்த 1932 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங் தனது கல்வியை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு பொருளாதார டிபில் முதுகலை பட்டமும் பெற்றார். 1962 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது.
பிறகு தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட ஒரு சில பதவிகளில் இருந்தார். 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் தேர்வாணார். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக பணியாற்றினார். பிறகு 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 14 வது பிரதமராக பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்கள் அவைக்கு சென்று அவரின் பதவிக்காலம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு மசோதா மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அவைக்கு வந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார். தொடர்ந்து நாட்டுக்காக உழைத்த அவர் 1987 ஆம் ஆண்டு பத்ம விபூஷன், 1993 ஆம் ஆண்டில் நிதி அமைச்சருக்கான யூரோ பண விருது, 1993 மற்றும் 94 ஆகிய இரண்டிலும் ஆண்டின் நிதி அமைச்சருக்கான ஆசிய பண விருது, 1995 ஆம் ஆண்டு இந்திய அரசியல் காங்கிரஸின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது ஆகிய விருதுகளை பெற்றார்.
இவருடைய கடின உழைப்பு மற்றும் அவருடைய பணிவு, மென்மையான நடத்தை ஆகியவற்றுக்காக அறியப்படும் மண்மோகன் சிங் தன்னுடைய தொலைநோக்கு பார்வைக்காக மட்டுமல்லாமல் இந்தியாவை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கும் வழி வகுத்துள்ளார். இப்படி தொடர்ந்து இந்தியாவிற்காக உழைத்த மன்மோகன் சிங்குக்கு நேற்று தெரிய என மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். 92 வயதில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் மற்றும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…