பிலிம் பேர் அவார்டு.. கிளாமரான உடையில் வந்த ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் வைரல்..

By santhoshinikarthik on ஆவணி 4, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் கீர்த்தி சுரேஷ் முதலில் மலையாள சினிமாவில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதை  தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் திரை உலகை கலக்கினார். மேலும் தொடரி, ரெமோ ,பாம்பு சட்டை ,பைரவா, தானே சேர்ந்த கூட்டம் சாமி 2 சண்டக்கோழி 2 ரஜினியுடன் அண்ணாத்த மாமன்னன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.

   

மேலும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவான ரகு தாத்தா படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் பிரமோஷனில் மிக பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த 69ஆவது ஃபிலிம் ஃபேர் அவார்டு நிகழ்ச்சியில் கீர்த்தி  சுரேஷ் பங்கேற்று அவரின் படத்திற்கு அவார்டு வாங்கி  உள்ளார்.

   

 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் லட்சணமான மற்றும் அழகான உடைகளை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் நிற்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது மிக கிளாமரான உடை அணிந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.