Categories: சினிமா

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

Spread the love

மலையாளத் திரை உலகில் சினிமாவிலும் டிவி சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த நடிகர் தான் நடிகர் திலீப் சங்கர். எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர்… பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தார். இரண்டு நாட்களாக அறையிலேயே இருந்து அவர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகின்றது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வர பலமுறை கதவை தட்டி பார்த்தும் திலீபிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இதனால் ஹோட்டல் ஊழியர்கள் தாங்களாகவே கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த நிலையில் அங்கு திலீப் சங்கர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். 47 வயதான மலையாள நடிகர் திலீப் சங்கர் ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago