கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லாவிற்கும், ஊட்டியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு மணி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் பிரபல்லாவை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்த பிரபல்லா, தனது குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மணியின் பிரிவைத் தாங்க முடியாமல் மனமுடைந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மணக்கோலம் காண வேண்டிய இளம் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…
தமிழக சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இது வெறும் சடங்காக மட்டுமில்லாமல், அரசியல் களம் தாண்டிய…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'குதிரை பேர' விவகாரத்தில், அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் சட்டப்பேரவையிலேயே தமிழக வெற்றி கழக…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மக்கள்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்குப் பேரிடியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு…