“விஜய்யை நம்புகிறோம்”… சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பிய அமமுக எம்.எல்.ஏ…. அரசியலில் அடித்த அதிர்ச்சி…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘குதிரை பேர’ விவகாரத்தில், அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் சட்டப்பேரவையிலேயே தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். 17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காமராஜ், “விஜய் தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும்; தமிழக இளைஞர்களும் நாங்களும் அவரை நம்புகிறோம்” என்று கூறி தவெக அரசுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார்.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை மட்டுமே பிடித்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க சுயேச்சைகள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவை நாடியிருந்தது. அந்தச் சூழலில், அமமுகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான காமராஜின் ஆதரவு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. தொடக்கத்தில் அவர் ஆதரவு கடிதம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியானபோது, அதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக மறுத்தார். காமராஜின் கையெழுத்து போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

தினகரன் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மவுனம் காத்த காமராஜ், இன்று சட்டப்பேரவை மேடையில் அப்படியே நேர்மாறான முடிவை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. தனது உரையின் போது, “சில அரசியல் சூழ்நிலைகளால் கசப்பான சம்பவங்கள் நடந்தது” என்று அவர் குறிப்பிட்டிருப்பது, அவருக்கும் அமமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்ட விரிசலையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கட்சியின் முடிவுக்கு மாறாக அவர் எடுத்துள்ள இந்த தன்னிச்சையான முடிவு, அமமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலில், காமராஜின் இந்த பகிரங்க ஆதரவு விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு கூடுதல் பலத்தையும், தார்மீக வெற்றியையும் தேடித்தந்துள்ளது. அதே சமயம், தனது கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வை தவெக பக்கம் பறிகொடுத்திருப்பது டிடிவி தினகரனுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் வேகம் எடுத்துள்ள நிலையில், காமராஜின் இந்த நிலைப்பாடு எதிர்காலத்தில் புதிய கூட்டணிகளுக்கோ அல்லது கட்சித் தாவல்களுக்கோ அடித்தளமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

8 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

12 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

19 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

27 minutes ago

BIG BREAKING: நாடே அதிர்ச்சி…. நீட் தேர்வு ரத்து… சற்றுமுன் NTA-வின் திடீர் அறிவிப்பு…!

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது, மருத்துவக்…

35 minutes ago

“தவெகவிடம் வாலாட்டும் சி.வி.சண்முகம்”… அரை மணி நேரம்.. அந்த ரகசிய அறை… செந்தில் பாலாஜியுடன் என்ன பேசினீர்கள்?… வெடிக்கும் அதிமுக மோதல்…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர்…

41 minutes ago