அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்குப் பேரிடியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டும் வென்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுத் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னணி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிமுகவின் இந்தச் சரிவுக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாகத் திரண்டுள்ளனர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார். குறிப்பாக, “திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாகவும், தான் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் எடப்பாடி கூறியது, கட்சியின் கொள்கைக்கே எதிரானது” என அவர் சாடினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டே திமுகவை பிரதான எதிரியாகக் கருதி அரசியல் செய்து வந்த அதிமுக, இன்று அவர்களின் ஆதரவை நாடுவது தொண்டர்களுக்கு இழைக்கும் துரோகம் என சி.வி. சண்முகம் தரப்பு வாதிடுகிறது. இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான தீர்மானம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, பிளவு உறுதியாகியுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி. வேலுமணியும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான கடிதத்தை அவர்கள் தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் இந்த அதிருப்தி குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க, பிறந்தநாள் அன்றே கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் கோலோச்சிய அதிமுக, இன்று உட்கட்சி மோதலாலும், தவெக-வின் எழுச்சியாலும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு நிலைகுலைந்து போயிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது, மருத்துவக்…
அதிமுகவில் உட்கட்சி பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர்…
கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துள்ள நிலையில், அக்கட்சியில்…