“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D பகுதியில் உள்ள தனது வாடல் வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநில போலிஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகக் காவல் துறையில் பணியாற்றி வந்த ஜான்வி தபி, விவாகரத்தானவர்.

இவர் அகமதாபாத் ஷாஹிபாக் காவல் தலைமையகத்தில் காவலராகப் பணியாற்றி வந்த நிலையில், காந்திநகரில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் ஒரு அரக்கனாக இருந்திருக்க விரும்புகிறேன்’ என மர்மமான மற்றும் குழப்பமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை இரவு அவரது வீட்டின் பூட்டிய கதவுக்குப் பின்னிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜான்வி தபியின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதைக் கண்டு உறைந்துபோயினர். அவர் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்ட 48 மணி நேரத்திற்குள் இந்தச் சோகம் நடந்துள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் காந்திநகர் போலிஸார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.