“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சி தரும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கைத் தீவிரமாக விசாரித்து வந்த போலிஸார், கொலையாளி பயன்படுத்திய செல்போன் எண்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர்.

இதில், துப்பாக்கியால் சுட்ட முக்கிய ஷூட்டரான விஷால் கௌதம் என்பவர், கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு புதிய சிம் கார்டை வாங்கியது தெரியவந்தது. அந்தப் புதிய எண்ணில் இருந்து தொழிலதிபர் வினீத் மனோச்சாவின் மகன் சுப்ரத் மற்றும் மருமகள் ஷாலு ஆகிய இருவரின் செல்போன்களுக்கும் 6 முறை ரகசியமாக போன் கால்கள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

   

கான்பூர் காவல் ஆணையர் ரகுபீர் லால் இதுகுறித்துத் தெரிவிக்கையில், பெற்ற தந்தையைக் கொலை செய்ய மகனே கூலிப்படைக்குச் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார். சொந்தக் குடும்பத்தினரே சொத்துக்காக அல்லது முன்விரோதத்தால் கோடீஸ்வரரைக் கூலிப்படை வைத்துத் தீர்த்துக்கட்டினார்களா என்ற இந்த வழக்கு கான்பூர் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.