“மனுஷனா நீ, ஒன்றரை வயது குழந்தையை துடி துடிக்க”… நள்ளிரவில் யமுனை ஆற்றில் தந்தை செய்த கொடூரம்… கண் விழித்த தாய்க்கு காத்திருந்த பேதிர்ச்சி…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், பெற்ற மகனையே தந்தை ஒருவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சௌரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர், தனது ஒன்றரை வயது மகன் கார்த்திக்கை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது ரகசியமாகத் தூக்கிச் சென்றுள்ளார். ஊருக்கு அருகில் உள்ள யமுனை ஆற்றின் கரைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர், அங்கு இரக்கமின்றி குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை ஆற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் கணவனையும் குழந்தையையும் காணாமல் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் தேடியபோது, ராஜேந்திரா தனது சொந்த கிராமத்திற்குச் சென்றது தெரியவந்தது.

உறவினர்கள் அவரிடம் பிடித்து விசாரித்தபோது, குழந்தையைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரை உடனடியாகக் கைது செய்தது. முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தனது இரண்டு மகள்கள் இறந்துவிட்டதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அடிக்கடி குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது யமுனை ஆற்றில் குழந்தையின் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago