நெல்லையில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த மகளுக்கு எதிராக தந்தை வெறிச்செயல்… கதவை சரமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டு வீச்சு..! இரவு நேரத்தில் நடந்த கொடூரம்…!!

Spread the love

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுருளை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய முத்துக்குமார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி முருகனின் 18 வயதுடைய மகள் வித்யாவும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி மாணவியான வித்யாவின் காதலுக்கு அவரது தந்தை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 20-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, சுருளை கிராமத்தில் உள்ள முத்துக்குமாரின் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

முத்துக்குமார் தனது கிராமத்தில் தனியாக ஒரு புதிய வீட்டைக் கட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவில், முத்துக்குமாரும் வித்யாவும் தங்களது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆத்திரமடைந்த தந்தை முருகன், முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வீட்டின் கதவைச் சரமாரியாக வெட்டியதோடு, ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதற்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

இதில் வீடு தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், முருகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குப் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

8 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

8 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

9 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago