FLASH NEWS: 45 அடி ஆழத்தில் காத்திருந்த எமன்… விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி…. சென்னையில் அதிர்ச்சி…!

Spread the love

சென்னை யானைக்கவுனி பகுதியில் 45 அடி ஆழமுள்ள குறுகிய கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கித் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரவி (65) மற்றும் அவரது மகன் ஐயனார் (35) ஆகிய இருவரும் இத்துயரச் சம்பவத்தில் பலியான தொழிலாளர்கள் ஆவர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 45 அடி ஆழமும் குறைந்த விட்டமும் கொண்ட அக்கிணற்றுக்குள் தூர்வார இறங்கியபோது, உள்ளே அடர்ந்திருந்த நச்சு வாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கிணற்றுக்குள் போராடி இருவரின் உடல்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர்ப் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து யானைக்கவுனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இன்றி ஆபத்தான கிணற்றுப் பணிகளில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…

18 minutes ago

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

9 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

9 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

9 மணத்தியாலங்கள் ago