திருமணமான பல பெண்களுடன் உல்லாசம்… கொலை செய்து தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்… சடலத்துடன் கோழி கழிவு, இறந்த நாயின் உடலை போட்ட கொடூரம்…!

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மணிகண்டனுக்கு பணியாற்றும் நிறுவனத்தில் 27 வயதுடைய பாரதிராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அடிக்கடி வெளியில் செல்லும் இருவரும் பணத்திற்கு கணக்குப் பார்த்துக் கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து செலவழித்துள்ளனர்.

மேலும் பாரதிராஜாவும் மணிகண்டனும் பல்வேறு திருமணமான பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாக மாறியது. இதன் காரணமாக பாரதிராஜா மணிகண்டன் இடம் அவருக்கு செலவு செய்த பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணிடம் பாரதிராஜா தொடர்பு வைத்துள்ளார்.

இதனை அறிந்த மணிகண்டன் பாரதிராஜாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பார்க்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா மணிகண்டனை தீர்த்த கட்ட முடிவு செய்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி இரவு மணிகண்டனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மணிகண்டன் மற்றும் பாரதிராஜா அவர்களது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மணிகண்டன் மீண்டும் தன்னுடைய நண்பனிடம் அந்த பெண்ணை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டதால் பாரதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை செய்து தலையை துண்டித்துள்ளார்.

பிறகு அவருடைய உடலை பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோர் மதுரை மாவட்டம் கூட கோவில் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாலத்தின் அடியிலிருந்து மீட்டனர்.

ஆனால் தலை கிடைக்காத நிலையில் மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன் மற்றும் மதன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து தலையை எந்த இடத்தில் போட்டீர்கள் என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தரைபாலம் அருகே தலையை போட்டு அதன் மீது கல் வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர். அதேசமயம் மணிகண்டன் உடல் போடப்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசியது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் கோழி கழிவு மற்றும் இறந்து போன நாய் ஒன்றை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Nanthini

Recent Posts

பார்த்தாலே பதறுதே..! தன்னை கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்ற நபர்… தைரியத்தை பாராட்டு இணையவாசிகள்…!!

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம்  அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…

24 minutes ago

ஷாக்.! திடீரென தீப்பிடித்த ஆம்புலன்ஸ்… புதிதாக பிறந்த குழந்தை, மருத்துவர் உட்பட 2 பேர் பலி… குஜராத்தில் பயங்கர அதிர்ச்சி..!!

குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…

30 minutes ago

சூப்பரோ சூப்பர்..! “நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சமையல் போட்டி.. பெண்களே வீடியோ எடுத்து உடனே அனுப்புங்க… வெளியானது அறிவிப்பு…!

நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…

38 minutes ago

BREAKING: தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்…. பெரும் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

40 minutes ago

மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்ற தந்தை… எதிரே எமனாக வந்த லாரி… நொடி பொழுதில் தலை நசுங்கி துடிதுடித்து… பெரும் சோக சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…

48 minutes ago

BREAKING: மீண்டும் புயல் சின்னம்… தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை…. வந்தது அலெர்ட்…!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…

57 minutes ago