தமிழகத்தில் அனைத்து கிராமப்புற பள்ளிகளுக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நவம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை அக்டோபர் 28 இன்று முதல் டவுன்லோட் செய்யலாம். இதில் மாவட்டத்திற்கு 100 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
