அம்மாடியோ… மருத்துவமனையில் ரூ700-க்குக் காலை உணவா?… உணவகத்தின் அநியாயக் கட்டணத்தால்… அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்… சோஷியல் மீடியாவில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!

Spread the love

டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அமைந்துள்ள ஹல்தீராம்ஸ் உணவகத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகச் கூறி வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சந்தோஷ் பாரத்வன்ஷி என்ற நபர், மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த ஹல்தீராம்ஸ் கிளையில் 2 மசாலா தோசை, 1 தேநீர் மற்றும் 1 மோர் ஆர்டர் செய்துள்ளார். இதற்கான மொத்தக் கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ 708 வசூலிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்தப் ரசீதின்படி, ஒரு மசாலா தோசையின் விலை ரூ 274, ஒரு கப் தேநீரின் விலை ரூ 74 மற்றும் மோரின் விலை ரூ 85 எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. இதனைத் தனது ‘X’ தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மருத்துவமனைக்கு வந்தாலே சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவர் கட்டணங்களால் பணப்பைக் காலி ஆகிவிடும் சூழலில், உணவிற்கும் இவ்வளவு அதிக விலை நிர்ணயிப்பது மக்களைச் சுரண்டுவது போல உள்ளது” என ஆதங்கப்பட்டார். மேலும், வெளியிலிருக்கும் உணவகங்களில் வழங்கப்படும் காலை உணவுத் தள்ளுபடிகள் ஏதும் மருத்துவமனை வளாகக் கிளையில் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவரது பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் அதிகப்படியான விலையைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “மருத்துவமனைகள் தற்போது வணிக வளாகங்களைப் போல மாறி லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன” என்றும், நோயாளிகளின் உறவினர்களுக்கு வேறு வழியில்லாத சூழலைப் பயன்படுத்தி இத்தகைய அதிக விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஷாக்… உதயநிதி நாளை சட்டசபை வரக்கூடாது?… CM விஜய் மேஜைக்கு வந்த… ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணி என்ன?…

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…

7 மணத்தியாலங்கள் ago

அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…

7 மணத்தியாலங்கள் ago

போயிட்டு வரேன்… கிருத்திகாவுக்கு சைகை… இன்பநிதியை கட்டி அணைத்த உதயநிதி… நீலாங்கரை வீட்டில் நடந்த உருக்கமான நிமிடங்கள்…!

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதயநிதி ஸ்டாலின் ஜாமினில் விடுவிப்பு…!

தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி, திமுக நிர்வாகி உதயநிதி இன்று காலை…

7 மணத்தியாலங்கள் ago

“நீதிமன்ற உத்தரவு மீறலா?… 8 மணி நேரப் பயணம்… செங்கிப்பட்டியில் முற்றுகை… வேனை விட்டு இறங்க மறுத்த உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது…!!”

திருச்சியில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் செங்கிப்பட்டி…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்… முதல்வர் விஜய் குறித்து அவதூறு… போலீஸ் வேனில் தூக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்?… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுக படை…!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து போலீஸ்…

7 மணத்தியாலங்கள் ago