பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 5000 பேர் வசித்த நாட்டக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்சினை காரணமாக தற்போது அங்கு ஒருவர் மட்டுமே வாழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கவனம் சாதாரண தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களில் நிலைத்திருக்கும். அதே வேளையில்இந்த கிராமம் உங்கள் கண்காணிப்பின் கீழ் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்பாடான அடையாளம்.
இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து புகார் அளித்து வருகிறார்கள். மேலும் கிராமத்தில் சமீபத்தில் நடந்த கொலைகள் முழு சமூகத்தையும் விரக்தியில் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தி உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 4835 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி இருக்கிறது.
ஆனால் குழாய் நீர் இணைப்புகளுக்காக போராடும் கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் இணைப்பு அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாக தோல்வி மட்டுமல்ல துரோகம். இதுதான் தமிழகத்தின் பரிதாப நிலை” என்று பதிவிட்டுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…