குடிக்க தண்ணீர் இல்ல.. “இதுதான் தமிழ்நாட்டின் பரிதாப நிலை”… எல்லாரும் ஊரைவிட்டே ஓடிட்டாங்க… பாஜக அண்ணாமலை வெளியிட்ட ஆதார வீடியோ..!

By Soundarya on ஆவணி 5, 2025

Spread the love

பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 5000 பேர் வசித்த நாட்டக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்சினை காரணமாக தற்போது அங்கு ஒருவர் மட்டுமே வாழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கவனம் சாதாரண தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களில் நிலைத்திருக்கும். அதே வேளையில்இந்த கிராமம் உங்கள் கண்காணிப்பின் கீழ் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்பாடான அடையாளம்.

இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து புகார் அளித்து வருகிறார்கள். மேலும் கிராமத்தில் சமீபத்தில் நடந்த கொலைகள் முழு சமூகத்தையும்  விரக்தியில் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தி உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 4835 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி இருக்கிறது.

   

   

ஆனால் குழாய் நீர் இணைப்புகளுக்காக போராடும் கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் இணைப்பு அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாக தோல்வி மட்டுமல்ல துரோகம். இதுதான் தமிழகத்தின் பரிதாப நிலை” என்று பதிவிட்டுள்ளார்.