தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமையினால் வாடிய எம்ஜிஆர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் எம்ஜிஆர். இவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை நாடி யார் எது கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து கொடுப்பவர்.
எம்ஜிஆர் தான் மட்டுமல்லாமல் தன்னை சேர்ந்தவர்கள் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதனால் எம்ஜிஆரை தான் எல்லோரும் பார்க்கக் காத்திருப்பார்கள். ஆனால் ஒரு இயக்குனர் எம்ஜிஆரை காக்க வைத்து இருக்கிறார். அது என்ன சம்பவம் அது யாரால் நடந்தது என்பதை பற்றி இனி காண்போம்.
ஏ வி எம் தயாரிப்பில் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இது அமோக வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி விழாவை நடத்த வேண்டும் என்று ஏவிஎம் முடிவெடுத்தனர். அப்போது கே பாக்யராஜ் எம்ஜிஆர் அவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே ஏவிஎம் எம்ஜிஆர் இடம் கேட்டிருக்கிறார்கள். அவர் உடனே அடுத்த வாரம் தேதி வைங்க நான் வரேன் என்று கூறியிருக்கிறார்.
பின்னர் ஏவிஎம் நிறுவனம் நம்முடைய எல்லா நிகழ்ச்சிகளுக்குமே எஸ் பி முத்துராமன் தான் உரையாற்றுவார். இப்போது அவர் கண் ஆபரேஷன் செய்து இருக்கிறார். அடுத்த மாதம் தேதி வைத்தால் அவர் கொஞ்சம் சரியாகி வந்துவிடுவார் என்று கூறி இருக்கின்றனர். உடனே எம்ஜிஆர் சரி அதன்படியே வையுங்க எல்லோரும் எனக்காக காத்திருப்பாங்க ஆனால் இந்த இயக்குனர் என்னையே காக்க வைத்து விட்டார் என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.