“என்னா வெயிலு சாமி!.. பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராதீங்க!… ஈரோடு கலெக்டர் விடுத்த அதிரடி வார்னிங்”…!!!

Spread the love

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சர்வ சாதாரணமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருவதால், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், இரவு நேரங்களில் நிலவும் கடுமையான புழுக்கத்தால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

இந்த வெப்ப அலை பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் புதிதாக ‘வெப்ப தடுப்பு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு 5 சிறப்பு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஓஆர்எஸ் (ORS) கரைசல்கள் வழங்கவும் போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், காபி, டீ மற்றும் கார்போனைட் குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர், மோர், எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகளைப் பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்டம் முழுவதும் அவசரத் தேவைகளுக்காக 94,858 ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் 13,592 ஐ.வி (IV) திரவங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்குப் போதிய குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுமாறும், அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

19 minutes ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

33 minutes ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

1 மணத்தியாலம் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

1 மணத்தியாலம் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

1 மணத்தியாலம் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago