தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகச் செயல்பட்டு, ஒரே நாளில் தனது கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற உத்தேசப் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.
பாஜக தரப்பில் கோயம்புத்தூர் வடக்கு, நாகர்கோவில், நெல்லை, மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட 27 முக்கிய தொகுதிகள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், பாமகவுக்கு அதன் செல்வாக்கு மிகுந்த வட மாவட்டங்களான தருமபுரி, பென்னாகரம், விழுப்புரம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 18 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சிக்குச் சைதாப்பேட்டை, மதுரை மத்தி, தஞ்சாவூர் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உத்தேசப் பட்டியல் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை தலா 1 முதல் 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இக்கட்சிகள் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தனது தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கினாலும், அதிமுக மிகக் குறுகிய காலத்தில் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் அறிவிப்பிற்குத் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகமாகக் கருதப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…
கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…