தானாக இயங்கிய லிப்ட்…! ப்ரொஜெக்டரை சுத்தம் செய்த பொறியாளர் துடிதுடித்து பலி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

Spread the love

சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கு ஸ்கிரீனை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பெரம்பூரை சேர்ந்த பொறியாளர் ராஜேஷ் என்பவர் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நான்காவது ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ், மூத்த பொறியாளர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன் டேவிட் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

சுமார் 25 மீட்டர் உயரத்தில் நின்று ராஜேஷ் ப்ரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஏற்கனவே கீழே இறக்கி வைத்திருந்த பழுதான லிப்ட் தானாக இயங்கி மேல் நோக்கி பாய்ந்தது. இதனால் நின்று கொண்டிருந்த ராஜேஷின் தலை கட்டிடத்தில் மேல் தலத்தில் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூத்த பொறியாளர் தனசேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

10 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

22 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

28 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

33 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

43 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

46 minutes ago