‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’… அரசு ஊழியரின் கண்ணீர் வரவழைக்கும் கடைசி கடிதம்…..!

Spread the love

டெல்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நிலவும் கடும் பணிச்சுமை காரணமாக, ஹரிஷ் சிங் மஹர் என்ற 43 வயது மாற்றுத்திறனாளி நீதிமன்ற ஊழியர், கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக நிர்வாக எழுத்தராக  பணியாற்றி வந்த அவர், 60 சதவீத உடல் ஊனம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில், தனக்கு வழங்கப்பட்ட பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும், கடுமையான வேலை அழுத்தம் காரணமாக தூக்கமின்றி தவித்ததாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வருங்காலத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு ‘இலகுவான பணிகள்’  வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சாகேத் நீதிமன்ற ஊழியர்கள் முறையான விசாரணை கோரி பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, மூன்று பேருக்குரிய வேலையை ஒருவரே செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இது ஊழியர்களின் மனநலனைப் பாதிப்பதாகவும் சாகேத் நீதிமன்ற சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இறந்த ஊழியருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பணிச்சுமையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இந்தத் துயரச் சம்பவம் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிச்சூழல் மற்றும் மன அழுத்தம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

10 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

19 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

27 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

35 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

56 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

1 மணத்தியாலம் ago