தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி சொந்தங்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அன்புமணி அரசியலை வியாபாரமாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இறுதிவரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், தனக்கு வாய்த்த மகனோ தான் உயிரோடு இருக்கும்போதே துரோகம் செய்வதாகக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி போட்டியிடும் மற்றும் ஆதரவு தரும் 18 தொகுதிகளிலும் அவரது அணியினரைத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்றும், துரோகம் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தற்போது ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்துத் தனித்துப் போட்டியிடும் சூழலில், மகனுக்கு எதிராகவே அவர் விடுத்துள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்களே எனக்கு மருந்தாவார்கள்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ள இந்தச் செய்தி, பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…