கோவை மாவட்டம் வளையபாளையத்தில் 80 வயது அருக்காணி அம்மாள் தனியாக வசித்து வந்தார். கணவர் கருப்பசாமி, மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தும் அவர் தனிமையில் இருந்தார். வாரிசுகள் அவ்வப்போது மட்டும் வந்து செல்வார்கள். கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால், நேற்று துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது அருக்காணி இறந்து கிடந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது கோபால் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அருக்காணி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்திற்காக இந்தக் கொலை நடந்தது. போலீசார் கோபாலை கைது செய்து மோதிரத்தை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்ததாக சிபிஐஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பில்லை…
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…