கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் சரண். 13 வயதான இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய நண்பர்களோடு வெளியே விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுவனின் நண்பர்கள் மது அருந்து சென்றுள்ளார்கள். அப்போது சரணும் அவர்களோடு சென்று மது குடித்தான். இதனை அடுத்து தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்று பயந்துள்ளார். இதனால் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார் .பிறகு பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷத்தை குடித்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பயந்து போன பெற்றோர்கள் அவரை அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்கள்.
அப்போது ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து இருந்த சரணை பார்த்து ஏன் வீட்டுக்கு வரவில்லை? என்று தந்தை கேட்டுள்ளார். அப்போது சரண் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாகவும் அதனால் உங்களுக்கு தெரிந்தால் திட்டுவீர்கள் என்று பயந்து வீட்டிற்கு வரவில்லை என்றும் பயத்தால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்கள் .ஆனால் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…
தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமையத்…
மனிதநேயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரமான உண்மை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிடியா கோர்டோ என்பவரின் வாக்குமூலம் மூலம்…
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்…