தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த அரசியல் பாரம்பரியத்தை உடைத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது. இத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்தத் தோல்வியால் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெகவில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று அரசியல் கட்சியினரை இணைக்கும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று காலை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் இணைவதற்காக 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். மதியம் 12 மணியளவில் அவர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டபோது, முட்டி மோதிக்கொண்டு உள்ளே சென்றனர். தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் முக்கியப் பிரமுகர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களான மூன்று முறை வலங்கைமான் தொகுதி எம்எல்ஏவாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கோமதி சீனிவாசன் தவெகவில் இணைந்தார். இவர்களுடன் அதிமுக கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பிரமணியன் (திருவையாறு), சாந்தி ராமு (குன்னூர்), மதுரை அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். மேலும், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகளும் தொழிலதிபருமான மேனகா ஆகியோரும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…