யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… கரூர் துயரம் எதிரொலி… திடீரென முடிவை மாற்றிய இபிஎஸ்….!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கரூர் துயரத்தை தொடர்ந்தேன் நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இன்று குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். நீதிமன்ற தடையைச் சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ் உரிய அனுமதியுடன் அக்டோபர் 8ஆம் தேதி அங்கு பரப்புரை மேற்கொள்ளதாக அறிவித்துள்ளார்.