சிவகங்கை மாவட்டம் திருப்புவன காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தார் . இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆரில் கூறியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, “துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதில் உங்கள் மகன் உயிரிழந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.
இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையானது. இது யாராலும் மன்னிக்க முடியாது. பெற்ற தாய்க்கு மட்டுமே அதனுடைய வலி தெரியும். உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மனநிம்மதியோடு இருப்பார்கள். நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…