FLASH NEWS: சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு… அதிகாலையிலேயே பரபரப்பு…!

Spread the love

சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய 5 இடங்களில் இந்தச் சோதனையானது ஒரே நேரத்தில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் பிரபல பைனான்சியர் ஒருவரைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக, அந்த பைனான்சியரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர ஆவண சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று, அதை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

ஜெயம் ரவி – குஷ்பூ மோதலுக்கு நடுவே வைரலாகும் ‘சைமா’ வீடியோ… அன்று உருகி உருகி பாராட்டிய குஷ்பூ.. இன்று என்னாச்சு..?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.…

2 minutes ago

அதிமுகவில் அடுத்த பிளவு?… இபிஎஸ்-க்கு எதிராக வார் ரூம் அமைத்த வேலுமணி அணி… பின்னணியில் தவெக… பரபரப்பு தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற…

4 minutes ago

“அரசு பேருந்துகளில் இனி இது நடக்காது… பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய ரூல்ஸ்.. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?.. போக்குவரத்து கழகத்தின் அதிரடி எச்சரிக்கை”…!!

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கும், அதனைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடியாகத்…

9 minutes ago

பேசித் தீர்க்கலாம்னு கூப்பிட்டு… மகளின் காதலனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த தந்தை.. கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரங்கேறிய பகீர் ஆணவக்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள்…

30 minutes ago

அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு..! EPS பக்கம் சாய்ந்தார் தமிழ்மகன் உசேன்.. எஸ்பி வேலுமணி தரப்புக்கு விழுந்தது பலத்த செக்..!!

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (EPS) தனது முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு…

35 minutes ago

“இங்கிலாந்து வரலாற்றில் புதிய சாதனை!… 23 வயதில் மேயரான இந்திய வம்சாவளி இளைஞர்!… உலகே வியக்கும் இந்தியன் பெருமை”..!!

இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் (Elstree and Borehamwood) நகர சபையின் புதிய மேயராக 23 வயதான துஷார் குமார்…

36 minutes ago