அட கடவுளே… மழைக்காக கழுதைக்கு தாலி கட்டி கல்யாணம்… கோவையில் நடந்த வினோத சம்பவம்… நெட்டிசென்கள் ஷாக்…!

By Swetha on ஆவணி 17, 2026

Spread the love

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், மழை வேண்டி வேண்டி முறையிடவும் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ‘பஞ்ச கல்யாணி’ என்ற பழமையான நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பொழியும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.

இத்திருமணத்திற்காக லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு புடவை, வளையல், பாசி, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி மணமகள் போலவும், கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவித்து மணமகன் போலவும் அழகுற அலங்கரிக்கப்பட்டனர். பின்னர், கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் மேளதாளங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பாரம்பரிய முறைப்படி பெண் கழுதைக்கு தாலி கட்டப்பட்டு திருமணம் விமரிசையாக நடத்தப்பட்டது.

   

திருமணம் முடிந்ததும் மணமக்களான கழுதைகளுக்கு மறுவீடு அழைப்பு சடங்கும் நடத்தப்பட்டது. இதில் திரளாகக் கலந்துகொண்ட கிராம மக்களுக்கு திருமண விருந்தாக கம்பங்கூழ் வழங்கப்பட்டது. மழை பொழியும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் கிராம மக்கள் இந்த வினோத திருமண நிகழ்வை நடத்திக் கொண்டாடினர்.