ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போர், உலகையே உலுக்கிய நிலையில், அப்போது நடந்த சில ரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போரின் உச்சக்கட்டத்தில் அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஒரு விமானி உடனடியாக மீட்கப்பட்டாலும், மற்றொரு விமானி ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சிக்கிக்கொண்டார். அவரைத் தேடும் பணி மிகவும் சவாலாக இருந்த சூழலில், சிஐஏ (CIA) ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டியது. ஈரான் படைகளைத் திசைதிருப்ப, “விமானி மீட்கப்பட்டுவிட்டார்” என்ற போலித் தகவலைப் பரப்பி, அவர்கள் தேடுதல் வேட்டையைத் தளர்த்திய சமயம் பார்த்து, அமெரிக்கப் படைகள் ரகசியமாக அந்த விமானியை மீட்டன.
இந்த இக்கட்டான மீட்பு நடவடிக்கையின் போது, அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் அதீத கோபமும், பொறுமையின்மையும் ராணுவ நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதிய உயர் அதிகாரிகள், அவரை நேரடி ஆலோசனைகளில் அனுமதிக்கவில்லை. துணை அதிபர் ஜே.டி. வென்ஸ் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். முக்கியத் தகவல்கள் மட்டுமே ட்ரம்ப்பிற்கு அவ்வப்போது போன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், தனது அதிகாரிகளை மணிக்கணக்கில் திட்டித் தீர்த்ததாக ‘வால் ஸ்ட்ரீட்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானி மீட்கப்பட்ட பிறகு, ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஈரானை எச்சரிக்கும் விதமாகப் பதிவிட்ட கருத்துக்கள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பின. குறிப்பாக, வழக்கத்திற்கு மாறாக மத அடையாளங்கள் சார்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஈரானை வம்புக்கு இழுத்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “ஈரான் தலைவர்களைக் குழப்பவும், அவர்களை எரிச்சலூட்டவுமே இப்படிச் செய்தேன்; நான் எப்போது என்ன செய்வேன் என்று யாராலும் கணிக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்று தனது ஆலோசகர்களிடம் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். தனது செயல்கள் மூலம் எதிராளிகளைத் திகைக்க வைப்பதையே அவர் ஒரு ராஜதந்திரமாகப் பயன்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் முதல் வாரத்தில் ஈரானை நோக்கி, “இன்று இரவு ஒரு நாகரிகமே அழியப் போகிறது” என்று பகிரங்க மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடுத்த சில மணிநேரங்களிலேயே தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். போர்நிறுத்தத்தை நீட்டிக்கவே முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் தனது முடிவை மாற்றிக்கொள்வது ட்ரம்ப்பிற்கு கைவந்த கலையாக இருந்துள்ளது. சமீபத்திய மோதல்களின் போதும் அவர் இதேபோன்ற ‘யூகிக்க முடியாத’ அணுகுமுறையைக் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிகாரவர்க்கத்திற்கும் ட்ரம்ப்பிற்கும் இடையிலான இந்த முரண்பாடுகள் தற்போதைய புவிசார் அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக…
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…