இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

By Soundarya on ஆனி 4, 2026

Spread the love

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான ‘கிரைண்டாட்ராப்’ (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்களும் டால்பின்களும் கொடூரமாக வேட்டையாடப்பட்டுள்ளன. இந்த கணக்கற்ற மற்றும் இரக்கமற்ற வேட்டையினால் அந்தப் பகுதியின் முழு கடற்கரையும் ரத்தமயமாகக் காட்சியளிக்கிறது. கடலே செந்நிறமாக மாறியுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள், ஒட்டுமொத்த உலக நாடுகளையும் விலங்கு நல ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் இந்த கொடூரமான வேட்டைக்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரம்பரியம் என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்களின் இறைச்சிகள், அங்குள்ள உள்ளூர் மக்களின் உணவுத் தேவைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.