திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற பெண்ணின் முந்தானையை பிடித்துக் கொண்டு நாய் பாச போராட்டம் நடத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் தினம் தோறும் இலட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
பெரும்பாலும் செல்ல பிராணிகள் தனது எஜமானர்களிடம் தன்னை வளர்ப்பவர்கள் இடம் மிகவும் பாசமாக இருக்கும். அவர்கள் எங்கேயாவது சென்றால் பின்னாடி வாளையாடிக் கொண்டு செல்லும்.
அத்தகைய குணம் கொண்டது நாய். அதுமட்டுமா தெருவில் இருக்கும் நாய்கள் கூட ஒருவேளை சோறிட்டால் போதும் நமக்கு மிகவும் விசுவாசம் ஆக இருக்கும். பொதுவாக பெண்கள் திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்வது வழக்கம் தான். அப்படி ஒரு பெண் திருமணம் முடிந்த பிறகு தனது கணவருடன் கிளம்பியுள்ளார்.