பாடகி பிருந்தா சிவகுமார் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தனது தந்தை மற்றும் அண்ணன்களை தொடர்ந்து திரையுலகில் பாடகியாக ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார். பாடகியாக இருந்த அவர் ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
பிருந்தா சிவகுமார் 2005ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது பாடகி பிருந்தா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….