‘கடவுளே உனக்கு கண் இல்லையா?’…ரவீந்தர் பகிர்ந்த முத்த புகைப்படம்…நெட்டிசன்களின் தெறிக்க விடும் கமெண்டுகள் இதோ…

By Begam

Published on:

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

   

ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான். தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர்.

இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார். கல்யாணம் ஆனது முதல் கோயிலுக்கு சென்றது, ஹோட்டலுக்கு சென்றது, தன் மனைவி தன்னைக் கட்டிபிடித்தது வரை அனைத்து புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்பொழுது இவர் மஹாலக்ஷ்மி தனக்கு முத்தம் குடுக்கும் நெருக்கமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பதிவிடுவது மட்டுமல்ல அதற்க்கு அவர் கொடுக்கும் கேப்ஷனும் மிக பிரபலம். இந்த புகைப்படத்துக்கு ‘பூமியில் சொர்க்கம் நான் அதை கண்டுபிடித்துவிட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர்  ‘கடவுளே உனக்கு கண் இல்லையா?’என்று கமெண்ட் செய்துள்ளார்.