“அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடாதீங்க”… ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்கணும் தெரியுமா?.. தவெக வேட்பாளர்களுக்கு விஜய் போட்ட ‘ரூல்ஸ்’…!!!

Spread the love

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு வெறும் வேட்பாளர் அறிமுகம் அல்ல, மாறாக “மக்களுக்கான காப்பாளர்களை” அறிமுகப்படுத்தும் முக்கியத் தருணம் என்று தனது உரையைத் தொடங்கினார். தனது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுக்குப் பெரிய அரசியல் செல்வாக்கு இல்லையென்றாலும் மக்களுக்காக உழைக்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசிய விஜய், அனுபவம் என்ற பெயரில் மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பவர்களாகவோ, கல்குவாரி தொழிலில் ஈடுபடுபவர்களாகவோ இருக்கக் கூடாது என்று சாடினார். மேலும், ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களைத் தாக்குபவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அனுபவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தொகுதி மக்களின் தேவைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தனது உரையில் திமுகவை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்த விஜய், அந்தப் பாரம்பரியக் கட்சியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் திருட்டு வழக்குகளில் சிறை சென்றவர்கள் கூட எம்.எல்.ஏ-க்களாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 1996 தேர்தலில் திமுகவின் தற்போதைய கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவருக்கு எதிராக, அவரைத் தோற்கடிக்கவே ஒரு வேட்பாளரைக் களமிறக்கிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். அந்தத் தலைவரின் பெயரை மரியாதை நிமித்தமாகத் தவிர்க்கிறேன் என்று கூறிய அவர், இதுபோன்ற தவறான முன்னுதாரணங்கள் அரசியலில் களையப்பட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

இறுதியாக, “களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே நான் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன்” என்று கூறிய விஜய், தன்னால் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால், தனது பிரதிநிதிகளாக இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக விளக்கினார். “நம்முடைய அக்கா, தங்கை, அண்ணா, தம்பி போன்றோரை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர்களை வெற்றி பெறச் செய்து எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது மக்களின் பொறுப்பு” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். விஜய்யின் இந்தத் தெளிவான அரசியல் விளக்கம் மற்றும் தாக்குதல் பேச்சு அவரது தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

7 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

60 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago