நடிகை ரஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் தமிழ் திரைப்படமான சுல்தான் திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘க்ரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. விஜய் தேவர் கொண்டவுடன் 2018 ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் அவர் பிரபலம் அடைந்தார்.
குறிப்பாக இப்படத்தின் ஒரு பாடலில் இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்யும் ஒரு காட்சி இடம் பெறும். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. ரஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் தளபதி விஜய் உடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ‘குட் பாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தான் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் இப்படத்தில் நடிப்பதற்காக வெறும் ரூபாய் 30 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் லட்சங்களில் ஆரம்பித்து தற்போது கோடிகளில் புரளுகிறார் ரஷ்மிகா மந்தனா என்று கூறி வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…