ரூ. 24,000 கோடி மதிப்புள்ள அரண்மனையில் வசிக்கும் இந்திய பெண்மணியைப் பற்றி தெரியுமா…? அம்பானி வீட்டை விட 20 மடங்கு பெருசாம்…

Spread the love

இந்தியாவிலேயே மிகவும் பெரிய பணக்காரர் என்றால் அது அம்பானி தான். அவருடைய வீடு தான் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புகளில் கூறப்படுகிறது. ஆனால் அம்பானியை விடவும் பல மடங்கு பெரியதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ள ஒரு வீட்டின் முன்னாடி அம்பானி வீடு எல்லாம் குடிசை மாதிரி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு மிகப்பெரிய அரண்மனை இந்தியாவில் இருக்கிறது.

அம்பானியின் வீட்டையும் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையை காட்டிலும் நான்கு மடங்கு பெரியது லட்சுமி விலாஸ் அரண்மனை. இந்த அரண்மனை குஜராத்தில் உள்ளது பரோடா குடும்பத்திற்கு இந்த அரண்மனை சொந்தமாகும். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய தனியார் குடியிருப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த அரண்மனை ஒரு காலத்தில் ஆண்டு வந்த கெய்க்குவாடுகளுக்கு சொந்தமானது.

தற்போது ஹெச் ஆர் எச் சமர்சிங் கெய்க்குவார்டு மற்றும் அவரது மனைவி ராதிகா ராஜீ கெய்க்குவார்டு பொறுப்பில் இந்த அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை சுமார் 3,04,92,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த லட்சுமி விலாஸ் அரண்மனையில் 170 அறைகள் ஒரு கோல்ப் மைதானம் ஆகியவை இருக்கிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு 48 ஆயிரத்து 750 சதுரையில் மட்டும் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது ஆகும். 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்று வரை கட்டப்பட்ட மிகப்பெரிய தனியார் குடியிருப்பாகும். குஜராத்தில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான மன்னர் கால அரண்மனை அதன் விரிவான உட்புறங்கள் நன்கு பராமரிக்கப்பட்ட மொசைகுகள் சரவிளக்குகள் மற்றும் கலை படைப்புகள் ஆயுதங்கள் மற்றும் கலைகளின் மிகவும் ஈர்க்கக்கூடிய தொகுப்பு ஆகியவற்றை இந்த அரண்மனை கொண்டுள்ளது.

இந்த அரண்மனை 1890 இல் கட்டப்பட்டது. அம்பானியின் ஆன்டிலியா வீடு ரூபாய் 15,000 கோடி மதிப்புள்ளது என்றால் இந்த லட்சுமி விலாஸ் அரண்மனையின் மதிப்பு ரூபாய் 24,000 கோடி என்பது ஆகும்.

admin

Recent Posts

இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..? ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அதிரடி வேண்டுகோள்…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

3 minutes ago

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

42 minutes ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

51 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

54 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

58 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

1 மணத்தியாலம் ago