Categories: சினிமா

15 வருட பகை… நெப்போலியன்- விஜய் மோதல்… என்ன நடந்தது தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

பின்னர் தனது 18-வது வயதில் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய். தொடர்ந்து 1990 காலகட்டத்தில் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். 2000 கால கட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமான புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வந்தார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் படம் வெளிவந்தாலே ஹிட் தான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தார்.

தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்து அதன் பணிகளை பார்த்து வருகிறார். இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் நடித்த வெற்றி படங்களில் ஒன்றுதான் போக்கிரி. இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்து மக்களிடத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் நெப்போலியன் விஜயுடன் இணைந்து நடித்திருப்பார். அப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நெப்போலியன் மாற்றம் விஜய்க்கு இடையே ஒரு மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதையும் நெப்போலியன் ஒரு நேர்காணலில் எனக்கும் விஜய்க்கும் ஒரு பிரச்சனை என்று மறைமுகமாக தான் கூறியிருப்பார். என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

தற்போது தயாரிப்பாளர் பாலாஜி நெப்போலியன்க்கும் விஜய்க்கும் நடந்த மோதலை பற்றி கூறியிருக்கிறார். அது என்னவென்றால் போக்கிரி பட சூட்டிங் நடுவில் விஜய் கேரவனில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது விஜயை காண நெப்போலியன் சென்றிருக்கிறார். அப்போது வெளியே இருந்த காவலாளர்கள் அவரை தடுத்து இருக்கின்றனர். நெப்போலியன் நான் பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்டு இருக்கிறார். உடனே கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய் எதுக்கு இப்படி நான் ரெஸ்ட் எடுக்கிற டயத்துல சத்தம் போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

உடனே நெப்போலியன் இல்ல தம்பி நான் உங்கள பாக்கணும்னு தான் நான் வந்தேன் என்று கூறுகிறார். அதுக்கு விஜய் அநாகரிமா இப்படித்தான் சத்தம் போடுவீங்களா என்ற விஜய் கேட்டிருக்கிறார். இல்ல தம்பி நம்ம பழகுறோம் வேலை பார்க்கிறவங்க உரிமையில் தான் நான் அப்படி வந்தேன் என்று கேட்டிருக்கிறார். அப்போது விஜய் உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை நான் உங்க தம்பியும் இல்லை endru மிகவும் கடுமையாக திட்டி விட்டதாகவும் அதனால் தான் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பகை 15 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது இன்னும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

admin

Recent Posts

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

4 minutes ago

ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி அவுட்… கரடியின் பிடியில் சிக்கிய இந்தியப் பங்குச்சந்தை… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ‘ஏஐ’ புயல்….!

பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

12 minutes ago

“அப்பா, அம்மா, தங்கை”…. ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை… குளியலறையை கழுவிய மகள்… பெங்களூருவில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்….!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…

20 minutes ago

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

27 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

33 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

43 minutes ago