மதுரையில் நடைபெற்ற த.வெ.க.,வின் 2 ஆவது மாநில மாநாட்டை பற்றி, பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. அதில் பேசிய தலைவர் விஜய், மத்திய & மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறியதுடன், முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று விமர்சித்தார்.
இந்நிலையில் மதுரை மாநகர் பகுதி முழுவதும், தெற்கு மாவட்ட திமுக சார்பில், விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடங்கி வாசிங்க ப்ரோ” என்ற வசனங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “கதறல் சத்தம் கேட்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது” என்ற வாசகத்துடன் த.வெ.கவினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்துவந்த நிலையில், தற்போது திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே மாறி மாறி போஸ்டர் போர் நடைபெற்று வருகிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…