“திமுக-வின் ‘துரந்தர்’ பிரேமலதா!”… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் மீம்ஸ்… கோபத்தில் உடன்பிறப்புகள்… குஷியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

Spread the love

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு, யாரும் எதிர்பாராத விதமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது திமுக கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கே ஒரு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ ஆக அமைந்த நிலையில், தற்போது பிரேமலதாவின் அதிரடிப் பேச்சுக்கள் திமுக தலைமையையே தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் மேடையிலேயே அமர்ந்திருக்க, பிரேமலதா பேசிய பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “என் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை மற்றும் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது” என அவர் நேரடியாக முன்வைத்த விமர்சனம், மேடையில் இருந்த திமுகவினரை முகம் சுளிக்க வைத்தது. கூட்டணியில் இருந்துகொண்டே ஆட்சியை இவ்வாறு விமர்சிப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் திமுகவின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்தை பிரேமலதா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் நகர்வை திமுக முறியடித்த நிலையில், தற்போது பிரேமலதாவோ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் முருகன் அருளால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும்” எனப் பேசியுள்ளார். இது முழுக்க முழுக்க திமுகவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடாகக் கருதப்படுவதால், இணையவாசிகள் அவரை ‘வட சென்னை’ திரைப்பட ஆண்ட்ரியா கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரேமலதாவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை எதிர்க்கட்சியான அதிமுக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இது குறித்துப் பேசிய அதிமுக மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி, பிரேமலதாவை ஒரு ‘வீரப் பெண்மணி’ என்று புகழ்ந்ததோடு, அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும் மறைமுகமாக அதிமுகவிற்காகவே தேர்தல் வேலை செய்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியில் இருந்துகொண்டே எதிரணிக்குப் பலம் சேர்க்கும் வகையில் பிரேமலதா பேசி வருவது அரசியல் களத்தில் ஒரு ‘சஸ்பென்ஸ்’ நாடகமாகத் தொடர்கிறது.

Muthu Mani

Recent Posts

“அந்த ஒரு காரணத்திற்காக” பால்கனியிலிருந்து ரூ.25 லட்சத்தை அள்ளி வீசிய கணவன்… அதிர்ஷ்ட மழையில் நனைந்த வழிப்போக்கர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…

23 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்…” 5 சிறுமிகளுக்குத் துரோகம் செய்த வேட்டை தடுப்பு காவலர்…. ஊட்டியில் அதிரடித் தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவிகள் 5 பேரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர்…

36 minutes ago

“நகைக்கடன் வாங்குறீங்களா…?” வட்டியை பாதியாகக் குறைக்கும் கோல்டு ஓவர்ட்ராஃப்ட்… முழு விவரம் இதோ…!!

அவசர கால பணத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு 'கோல்டு ஓவர்ட்ராஃப்ட்' சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. வழக்கமான நகைக்கடனில்…

43 minutes ago

பெத்த மனமே பித்துப்பிடிச்சாலும் இப்படியா…? மகளை சிதைக்கத் துணையாக இருந்த தாய்க்கு 95 வருஷம் ஜெயில்… நீதிமன்றம் அதிரடி…!!

திருப்பத்தூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், திருச்சியில் தங்கிப் படித்தபோது தனது தாயின் உறவினர் மற்றும் சில கூலித்…

47 minutes ago

வால்பாறையில் கேரள ஆசிரியர்களுக்கு நேர்ந்த சோகம்…! 13-ல் தொடங்கி 9-ல் நின்ற வேன்.. விபத்து எப்படி நடந்தது…?

வால்பாறையில் கேரள சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 800 அடி பள்ளத்தில்…

1 மணத்தியாலம் ago