திருப்பத்தூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், திருச்சியில் தங்கிப் படித்தபோது தனது தாயின் உறவினர் மற்றும் சில கூலித் தொழிலாளர்களால் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தனக்கு நேர்ந்த துயரம் குறித்துத் தாயிடம் முறையிட்டும், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். மனவேதனையில் இருந்த சிறுமி தனது தோழியிடம் இது குறித்துக் கூற, அவர் குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் கொடுத்ததன் மூலம் இந்த அதிர்ச்சி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ நீதிமன்றம், மகளுக்கு நேர்ந்த அநீதியைத் தடுக்கத் தவறிய தாய்க்கு மிக அதிகபட்சமாக 95 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறுமியைச் சீரழித்த அக்பர் அலி, சரவணன் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு முறையே 50, 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…