தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குவது என்பது வாடிக்கையாக்கிவிட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் இரண்டு விபத்துக்கள் நடந்த நிலையில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூரில் அரசு பேருந்து டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் ஒன்பது பேர் பலியான சம்பவத்தில் ஓட்டுநர் தாஹா அலி கைது சர்ச்சையாகி உள்ளது.
திமுக அரசு TNSTC பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுணரை பலிக்காடா ஆக்குவதா என அதிமுக மற்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
