“CM பக்கத்துல த்ரிஷா போட்டோவை வச்சே ஆகணும்”…. அலறிய திமுக கவுன்சிலர்…. காரைக்குடி மாமன்றத்தில் திடீர் பரபரப்பு…!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று மேயர் தலைமையில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில் வார்டு வாரியாக உள்ள குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது மற்றும் தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, கூட்டத்தின் இறுதி நேரத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் அரங்கேறியது.

நேரம் இல்லா நேரத்தில் திடீரென எழுந்து பேசிய பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், ஒட்டுமொத்த அவையையும் தன் பக்கம் திருப்பினார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது நிர்வாகம் எப்படி லேட்டஸ்ட்டாக லேக் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் மத்தியில் தனது பிறந்தநாள் கேக்கை வெட்ட முதலமைச்சர் மறுத்திருந்தார். ஆனால், நள்ளிரவில் நடிகை த்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்” என்று மேடையில் அதிரடியாகக் கொளுத்திப் போட்டார்.

   

அத்துடன் நிறுத்தாத அந்தத் திமுக கவுன்சிலர், தற்போதைய இந்த ஆட்சியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மாமன்ற அரங்குகளிலும் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படத்திற்கு இணையாக, நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தையும் வைக்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார். இதைக் கேட்டு அவையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ஒரு படி மேலே போன அவர், “தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு காரணமே த்ரிஷா தானே? அதனால் மாமன்றத்தில் த்ரிஷா போட்டோவை வச்சே ஆகணும்… அப்படி வைக்கவில்லை என்றால் பெரிய கலவரமே ஏற்படும்” என சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் பேசினார்.

   

திமுக கவுன்சிலரின் இந்த விசித்திரமான கோரிக்கையாலும், சினிமா பாணி பேச்சாலும் அவையில் சிறிது நேரம் கடும் சலசலப்பும், அதே சமயம் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பலையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மேயர் மற்றும் பிற முக்கிய உறுப்பினர்கள் அந்த கவுன்சிலரை கஷ்டப்பட்டு பேசி சமாதானப்படுத்தினர். அதன் பிறகே காரைக்குடி மாமன்றக் கூட்டம் மீண்டும் வழக்கம் போலத் தொடர்ந்து நடைபெற்றது. மக்கள் பிரச்சினையை விவாதிக்க வேண்டிய இடத்தில், நடிகை த்ரிஷா விவகாரத்தை இழுத்து வந்து திமுக கவுன்சிலர் செய்த இந்த நக்கல் அலப்பறை இப்போது காரைக்குடி மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.