தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இருப்பதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு அந்த தொகுதியில் அதிமுகவின் வலிமையை பெரிதும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளப்புலியூரை சேர்ந்த திமுக நிர்வாகி பழனி தலைமையில் இந்த பெரிய குழு அதிமுகவில் இணைந்துள்ளது. மயிலம் பகுதியில் இது முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிவி சண்முகம் மயிலம் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதற்காக அவர் அந்த பகுதியில் முகாம் அமைத்து கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகின்றார். அவரது தொடர்ச்சியான பிரச்சார வேலைகளும் திமுகவினர் அதிமுகவில் இணைவதும், மயிலம் தொகுதியின் அரசியல் சமநிலையை மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது. அரசியல் மாற்றங்கள் தொடரும் நிலையில் மகிழம் தொகுதியில் நடந்த இந்த பெரிய இணைப்பு நிகழ்வு வரப்போகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு கூட்டணி பலம் சேர்க்கும் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…
தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…