தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இருப்பதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு அந்த தொகுதியில் அதிமுகவின் வலிமையை பெரிதும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளப்புலியூரை சேர்ந்த திமுக நிர்வாகி பழனி தலைமையில் இந்த பெரிய குழு அதிமுகவில் இணைந்துள்ளது. மயிலம் பகுதியில் இது முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிவி சண்முகம் மயிலம் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதற்காக அவர் அந்த பகுதியில் முகாம் அமைத்து கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகின்றார். அவரது தொடர்ச்சியான பிரச்சார வேலைகளும் திமுகவினர் அதிமுகவில் இணைவதும், மயிலம் தொகுதியின் அரசியல் சமநிலையை மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது. அரசியல் மாற்றங்கள் தொடரும் நிலையில் மகிழம் தொகுதியில் நடந்த இந்த பெரிய இணைப்பு நிகழ்வு வரப்போகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு கூட்டணி பலம் சேர்க்கும் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.
