திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் சீட்…. ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு… பிரேமலதா வெளியிடப் போகும் அறிவிப்பு…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்த தேமுதிக தற்போது ஆளும் திமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ராஜ்ய சபா சீட்டு வழங்கப்படாததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் திமுக, திரை மறைவில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள விசிக மற்றும் மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய வேண்டி இருப்பதால் தேமுதிகவிற்கு 8 முதல் 12 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க திமுக விரும்புவதாகவும் இந்த கூட்டணி குறித்த இறுதி முடிவை வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி என்று கடலூரில் நடைபெற உள்ள தேமுதிகவின் பிரம்மாண்டம் மாநில மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.