தமிழக முழுவதும் அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 17ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக அக்டோபர் 21 இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலிருந்து இன்று முதல் அக்டோபர் 23 வரை 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது
