அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் கட்சியின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அதிகாரப்பூர்வ உத்தரவைப் பின்பற்றாமல் கட்சித் தாவலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டவர்களைத் தகுதிநீக்கம் செய்வதன் மூலமே ஜனநாயக மரபுகளைக் காப்பாற்ற முடியும் என இன்பதுரை தரப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
